Nov 28, 2011

பேஸ்புக்கில் செக்ஸ் படங்கள் , வீடியோ, இணையதளத்தில் வெளியிட்டால் 5 ஆண்டு சிறை!


இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.
வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது.  பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க நடிகர், நடிகைகள் பெயரில் போலி இணைய தளங்களும் வலம் வருகின்றன. அதில், மார்பிங் மூலம் ஆபாச படம் இணைக்கப்படுகிறது. தற்போது, இணைய தளங் கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பலரும் போலியான தகவல் களை இணைய தளத்தில் பதிவு செய்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

இதன் மூலம் ஆபாச படம், காட்சி களை பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. சிலர் பெயர், ஊர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைகளில் தங்களது இணைய தள முகவரியில் உண்மைக்கு புறம் பான தகவல்களை பதிவு செய்கின்றனர். அதனை நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் பார்த்து தொடர்பு கொள்கின்றனர். எனவே, இணைய தளம் மூலம் ஏமாறாமல் இளைஞர்களும், பெண் களும் தங்களை காத்துக் கொள்வது நல்லது.

இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உயர் அதி காரி ஒருவர் கூறுகையில், ‘‘இணைய தளம் மூலம் தகவல் பறிமாறிக்கொள்வது அதிகரித்து விட்டது. இது வளர்ச்சியை காட்டுகிறது. இருப்பினும் சிலர் பொய்யான தகவல்களை பதிவு செய்து பிறரை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இது சட்டப்படி குற்றம். ஆபாச படங்கள், காட்சி களை பறிமாறிக் கொள்வது வெளிநாடுகளில் சட்ட பூர்வமாக அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால், இங்கு இதுபோன்ற செய லில் ஈடுபட்டால் முதல் முறை 5 ஆண்டுகள், தொ டர்ந்து செய்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை தண் டனை உண்டு’’ என்றார்.

No comments: