Nov 4, 2011

ஜெ., மனு: சுப்ரீம் கோர்ட் மீண்டும் நிராகரிப்பு சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு !


பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் நேரில் ஆஜராகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 20, 21 ந்தேதிகளில் ஆஜராகி 500க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


அப் போது பெங்களூர் கோர்ட் அவரை மீண்டும் நவமபர் 8-ந்தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. இதில் ஒரு நீதிபதி டி.எஸ். தாகூர் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்ததால் விசாரணை ஒத்திவைக்கபட்டது.

இன்று (4.11.2011) மீண்டும் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் முடிவில்,  ‘’நவம்பர் 8ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்.   நவம்பர் 8ம் தேதி ஆஜராக வசதி இல்லாவிடில் நீதிபதியிடம் கேட்டு தேதி முடிவு செய்யலாம்’’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

 சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் நவம்பர் 8ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நவம்பர் 8ம் தேதி ஆஜராக முடியாமல் போனால் நீதிபதியிடம் வேறு தேதியை கேட்டு பெறலம். ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தும் நாட்களுக்கு வரம்பு எதுவும் இல்லை எனவும், மொத்த கேள்விகள் கேட்கப்படும் வரை ஜெயலலிதாவிடம் விசாரணை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் விசாரணை முடியாவிட்டால் அடுத்தடுத்த நாட்களில் விசாரணையை தொடரலாம் என்றும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வழக்கின் முக்கியதுவத்தை அறிந்து வழக்கை விரைவில் முடிக்கவும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் தவ்வீர் பண்டாரி உத்தரவிட்டுள்ளனர்.

ஜெ., மனு: சுப்ரீம் கோர்ட் மீண்டும் நிராகரிப்பு சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு !

No comments: