Nov 19, 2011

நடிப்புக்கு முழுக்கு போடா மாட்டேன் நடிகை மந்த்ராபேடி !

நடிப்புக்கு முழுக்கு போட்டதாக கூறுவது உண்மையல்ல என்கிறார் மந்திரா பேடி. ‘மன்மதன்Õ படத்தில் சிம்புவுடன் நடித்தவர் இந்தி நடிகை மந்திரா பேடி. இவர் கூறியதாவது : குழந்தை பிறந்துவிட்டதால் நான் நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். அது சரியல்ல. ஆனால் என் வாழ்க்கையில் எல்லாம் மாறி இருக்கிறது. கர்ப்பமாகி 7 மாதம் வரை நான் நடித்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகுதான் ஓய்வு இப்போது என்னிடம் எல்லாமே மாறி இருக்கிறது.
எந்த பணியை ஒப்புக்கொள்வதற்கு முன்பும் அதுபற்றி யோசித்து முடிவெடுக்க வேண்டி உள்ளது. குழந்தையை பார்த்துக்கொள்வதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். சினிமாவை பொறுத்தவரை நான் தொடர்ந்து நடிக்கவே முடிவெடுத்திருக்கிறேன். நடிப்புக்கு முழுக்கு போடவில்லை. குழந்தை பிறந்துவிட்டதால் அம்மா வேடத்துக்கு கூப்பிடுகிறார்கள். எனக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லை. சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்று நடிப்பேன். டிவி தொடர்களிலிருந்து விலகி விட்டதாகவும் நினைக்கிறார்கள். அதிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

No comments: