Dec 2, 2011

ஜெயலலிதாவைப்போல வாய்தா வாங்காமல் துணிவோடு சட்டப்படி சந்திப்பேன்: மு.க.ஸ்டாலின்



திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க,ஸ்டாலின் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மு.க.ஸ்டாலின் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை, ஆழ்வார்ப்பேட்டையைசேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவரின் கொடுத்த புகார் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உட்பட மொத்தம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கவுள்ள நிலையில் தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது டிஜிபி-யிடம் நேரில் விளக்கம் அளித்துள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு ஸ்டாலின் வருகிறார் எனத் தெரிந்த திமுக தொண்டர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு முன் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments: