Jun 11, 2012

வைகோ ஆர்ப்பாட்டம்


மத்திய அரசின் ‘பிளஸ்-2’ பாடத்திட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளது. கேலி சித்திரத்தை நீக்க கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை மெமொரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து வைகோ பேசியதாவது:- 

இந்தி மொழி ஆட்சி மொழி என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து 1965-ல் தமிழ்நாட்டில் மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. 8 பேர் தீக்குளித்து உயிர் நீத்தார்கள். உன்னதமான இந்த போராட்டத்தில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். 

இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போது பாடப் புத்தகத்தில் வெளிவந்துள்ள கேலி சித்திரத்தை நீக்கவேண்டும். நீக்கும் வரை போராட்டம் தொடரும்.

No comments: