Jan 17, 2013

மதுரை மல்லிக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் காப்புரிமையான புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

மதுரை மல்லிக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் காப்புரிமையான புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

பூக்களில் மல்லிகைப்பூவுக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிற்தோ, அதைவிட அதிக மவுசு மதுரை மல்லிகைக்கு உண்டு.

இந்நிலையில், மதுரை மல்லியை மேலும் சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்படும் காப்புரிமையான புவிசார் குறியீடு, மதுரை மல்லிக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இது மல்லிகையின் உள்நாட்டு விற்பனைக்கும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் மிக்க பயனாக இருக்கும் என்பதால் மதுரை மல்லிகை விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மதுரை மல்லிகைக்கு சிறப்பு காப்புரிமை கிடைத்திருப்பதால் இனிமேல் மதுரை மல்லி என சொல்லி மற்ற சாதாரண மல்லிகைப்பூவை ஏமாற்றி விற்க முடியாதாம்!

No comments: