Jul 18, 2013

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு புதிய வசதி

விண்ணப்பதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான புதிய வசதி, மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா கூறினார்.
 இதுகுறித்து, அவர் மேலும் கூறியது:
  பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின்கீழ், மதுரை மற்றும் நெல்லையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் முன்பதிவு செய்யும் பலர், குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது இல்லை. இதனால், உண்மையாக பாஸ்போர்ட் பெற காத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
 ஒரே நாளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் வாய்ப்பு:
 முன்பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் நடைமுறை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், சேவை மையங்களில் முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நாளில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்காதவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது. ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே தவிர்க்க முடியாத காரணங்களால், குறிப்பிட்ட நாளில் சமர்ப்பிக்க இயலாமல் போய்விடுகிறது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறையின் காரணமாக, முன்பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு, அடுத்த நாளே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி கிடைத்து விடுகிறது.
 மேலும் ஒரு புதிய வசதி:
 மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், விசாரணைக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக விசாரணை கவுன்ட்டர் செயல்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பதாரர்கள் அளிக்கும் மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த சேவையைச் சீர்படுத்தும் வகையில் பாஸ்போர்ட் சம்பந்தமான விசாரணைகளுக்கு தொலைபேசி மூலமாகவோ, ஃபேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 பாஸ்போர்ட் அலுவலர்களைச் சந்திக்க வருவதற்கு 2 நாள்களுக்கு முன்பாக, தொலைபேசி அல்லது ஃபேஸ்புக் மூலமாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலர்களைச் சந்திக்கலாம். இந்த புதிய நடைமுறையின் மூலம், பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறையும்.
 அதோடு, குறிப்பிட்ட நாளில் வர இருக்கும் விண்ணப்பதாரர்களின் விவரம் முன்கூட்டியே அலுவலர்களுக்கு தெரியும் என்பதால், அவர்களது விண்ணப்பத்தை சரிபார்த்து தயாராக எடுத்து வைக்கப்படும். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பாஸ்போர்ட் வழங்கக் கூடியதாக இருந்தால், அன்றைய தினமே பாஸ்போர்ட் வழங்கப்படும்.
 மதுரை பாரதி உலா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்கள், மதுரை மற்றும் நெல்லை பாஸ்போர்ட் சேவை மையங்களில் இருந்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே, இந்த புதிய நடைமுறை பொருந்தும் என்றார். புதிய வசதிக்கான தொடர்பு எண்: 0452-2521204. ஃபேஸ்புக் முகவரி: passport office madurai.

Jul 15, 2013

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி

 
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி
 

முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும். தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும்.

பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் செய்யவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும் ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும்

குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும். நன்கு பயிற்சி பெற்றபிறகு 50 முறை கூட செய்யலாம்.

வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது. கர்ப்பிணிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும். ஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும்.

வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலியும் குறையும், வயிற்றில் உள்ள தேவையில்லாத சதையும் குறையும்..

இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி படிப்படியாக குறைவதை காணலாம். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும். முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.

          ம.தி.மு.க.வில் வைகோவுக்கு அடுத்தபடியாக தனது அதிரடி பேச்சுக்களால் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் நாஞ்சில் சம்பத். தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என விளையாட்டுக் காட்டிய இவர், கருப்புத் துண்டை மறந்துவிட்டு ஜெ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.  அடுத்த நிமிடமே அ.தி.மு.க. துணை கொள்கைப் பரப்பு செயலாளர் பதவியை ஜெ. அறிவித்திருக்கிறார்.  அவரை சந்தித்தபோது...

தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சி களில் பணியாற்றிய நீங்கள் அ.தி.மு.க.வில் இணைந்ததை எப்படி உணர்கிறீர்கள்?

நாஞ்சில் சம்பத் : கழுகால் விரட்டப்பட்ட புறா சிபி சக்கரவர்த்தியின் மடியில் அடைக்கலம் நாடியது போல் அ.தி.மு.க.வில் அடைக்கலம் நாடியிருக்கிறேன். அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது மாதிரி உணர்கிறேன். பள்ளத்தில் இருந்து சமவெளிக்கு வந்தது மாதிரி இருக்கிறது. மிகுந்த கனிவோடும் பரிவோடும் என்னிடம் உரையாடிய அம்மா, எனது குடும்பத்து நிலை குறித்து பரிவோடு விசாரித் தார்கள். என்மீது போ டப்பட்டிருந்த வழக்கு கள் திரும்பப் பெறப் படும் என சொல்லி என்மீது திணிக்கப் பட்ட விலங்குகள் நொறுங்கி விழுந்த பரவசத்திற்குள் ளாக்கினார்கள். இனி என் பயணம் அ.தி.மு.க.வின் வெற்றிகளையும் பெருமைகளையும் சொல் வதாக இருக்கும். பட்டபாடு களுக்கு உரிய பரிசுகளை இனி மேல்தான் பெறப்போகிறேன்.