Nov 23, 2017

தர்ம யுத்தமா..?


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பை எதிர்த்து கழகம் சார்பில் தொடர்ந்துள்ள வழக்கில் கழக வழக்கறிஞர் சாதுர்யமாக வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார். கருத்து வேறுபாடு என்பது கட்சித் தாவலாகக் கருத முடியாது. கட்சித் தாவல் சட்டத்திற்கும் அது உட்பட்டதல்ல. ஆளும் கட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, கட்சியை விட்டு விலகி னாலோ மட்டுமே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக் கையை சபாநாயகர் எடுக்க முடியும். ஆளுநரை நேரே சந்தித்து கடிதம் கொடுப்ப- த- £ல் மட்டுமே கட்சித் தாவல் சட்டத்தைத் தவ-றாகப் பயன்படுத்த முடியாது. சட்டத்தின் இயற்கை நீதிக்கு எதிராக சபாநாயகர் தகுதி இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் என்று வழக்கறிஞர் வாதம் செய்திருக்கிறார். ஆளும் கட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் வழக்கறிஞர் வாதம் செய்திருக்கிறார். இந்த பன்னீர், பாண்டியராஜன் உட்பட 12 பேரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டால் பன்னீர் எங்கு சென்று தர்ம யுத்தம் நடத்துவார்? என கூட இருக்கும் கொட்டைப் பாக்கு மண்டைகள்தான் பதில் சொல்ல வேண்டும்! ஆக, விரைவில் வெளிவர இருக்கும் தீர்ப்பானது உண்மையான நீதியை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. கோமாளிகள் கூட்டுச் சேர்ந்து எடுத்த முடிவு எந்த அளவிற்கு கேவலமானது என்பதும் மக்களுக்குத் தெரிய வரும். சென்ற வருடம் இதே மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர் இந்த வருடம் இதே மாதத்தில் துணை முதலமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது நிதித் துறையை கையில் வைத்திருக்கும் பன்னீர், தனக்கு நிதியைப் பற்றி எதுவும் தெரியாத காரணத்தால் மீன்வளத்தை முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ள அனுப்புகிறார்! ஆனால், மீனவளத்துக்கும் நிதியைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பது மீன்வளத்தின் நடவடிக்கையைப் பார்க்கும்போது தெரிகிறது. நிதி, நீதி & இரண்டிலும் சதி செய்து விதி விளையாடு-கிறது. இது ஒருபுறம் இருக்க, கோவையில் ஆய்வு நடத்திய ஆளுநர் துறைகள் பற்றிய ஆய்வு நடத்தவில்லை; பொழுது போகாதத- £ல் கலந்துரையாடல் நடத்தினார் என்று சப்பைக்கட்டு செய்து எடப்பாடியார் 
பேசி-யிருக்-கிறார். தலைமைச் செயலகத்திலேயே ஆளுநருக்கு தனி அறை என்பது இந்திய சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்-படுவதுதான் ஆளுநர் என்று தற்போது ஆட்சி-யாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் முறைகேடுகள் இவற்றைப் 
பற்றி அறிக்கை ஒன்றை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு தயாரித்து வருகிறது. அது விரைவில் ஆளுநர் வசம் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆளுங்கட்சிக்கு ஆப்பு வைக்கத்தான் ஆளுநர் வந்திருக்கிறார் என்று ஆளும் தரப்பிற்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது. எப்படியோ, நல்லது நடந்தால் சரி! கடந்த ஓர் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை கீழே இறங்கி வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டி- ருக்கிறது என்பதை மறைத்து, இந்தியாவில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருப்பதாக அண்டப் புளுகை பன்னீர் நந்தம்பாக்கம் தொழில் மாநாட்டில் கூறியிருக்கிறார். நிதியைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆளுநர் தற்போது ஒவ்வொரு துறை யாக ஆய்வு செய்து தன் பங்குக்கு ஒரு புதிய ‘தர்ம யுத்தம்’ ஒன்றை தொடங்கி யிருக்கி- றாரோ என்று மக்கள் நினைக்கத் தொடங்கி-யிருக்-கிறார்கள். ஏற்கெனவே ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் அதர்ம யுத்தத்தை நடத்திய துரோகிகள் தற்போது ஆளுநரின் தர்ம யுத்தத்தைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறார்கள் என்றும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆளுங்கட்சியினர் பற்றிய குறைகளை மாவட்ட ரீதியாக மக்கள் ஒன்று சேர்ந்து ஆளுநரிடம் மனு கொடுக்கத் தயாராகி வருகிறார்கள் என்ற செய்தியும் ஆளும் தரப்பினரை பேதியடையச் செய்திருக்கிறது! ஆளுநரின் நடவடிக்கை ஆளும் தரப்பிற்கு உளவியல் ரீதியாக பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். 
 சோழா அமுதன்

No comments: