Dec 1, 2017

ஆளுநருக்கு சமிக்ஞை!

மத்தியில் ஆளுங் கட்சியுடன் நெருக்கமாக உறவு கொண்டிருக்கும் பீகார் ஐக்கிய ஜனதா தளத்திற்கு தேர்தல் ஆணையம் அதன் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் இருக்கும் அணியினர் மத்திய ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் ‘இரட்டை இலை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் எடப்பாடி அணிக்கு ஒதுக்கியிருக்-கிறது. இதிலே ஒற்றுமை என்னவென்றால் பீகாரில் ஆளும் தரப்பிற்கும், தமிழ்ந- £ட்டில் ஆளும் தரப்பிற்கும் சாதகமாக தேர்தல் ஆணையம் தனது கை வரிசையை காட்டி--யிருக்கிறது. சட்ட திட்டங்கள், வி தி மு ¬ ற க ள் எப்படி-யிருந்தாலும் டெல்லிக்கு சாத்துமுறையை ஒழுங்-காக செய்-தால் தேர்தல் ஆணை-யம்-கூட தன் விதிக- ளைத் தளர்த்தி சின்னத்தை ஒதுக்கும் என்று தெரிகிறது. எவ்வளவுதான் நேர்மையான முறையில் வாதங்களை எடுத்து வைத்தாலும் தனது பிடிவாதத்தை தேர்தல் ஆணையம் மாற்றிக்கொள்ளவில்லை என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. தங்களுக்கே சின்னத்தை ஒதுக்கிவிட்டார்கள் என்றும், தங்களது சூழ்ச்சி, தந்திரம் அனைத்தும் வென்றுவிட்டது என்றும் அற்ப மகிழ்ச்சியை எடப்பாடி அணி-யினர் கொண்டாடி வருகிறார்கள். உதவி செய்வது போல் நடித்து ஊறு செய்ய தன்னை பா.ஜ.க. தயார் செய்து கொண்டு இருப்பதை எடப்பாடி அரசு இன்னும் புரிந்து-கொள்ளவில்லை! நுனிப் புல் மேய்ந்ததைப் போல தேர்தல் ஆணையம் தனது உத்தரவை வெளி-யிட்-டாலும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல துரோகிகளுக்கு ஒரு அணு-குண்டையும் எடுத்துப் போட்டிருக்கிறது. 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே ஆளும் தரப்பிற்கு இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டால் 111 பேர் என்பது 100 பேராக குறைந்துவிடும். இதன்மூலம் ஆளும் தரப்பினருக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை என்ற உண்மையை ‘தெறி’யடியாக தேர்தல் ஆணையமே வெளியிட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்கெனவே அற்ப மகிழ்ச்சியில் இருக்கும் எதிரிகள், தங்களது ஆட்சிக்கு அற்ப ஆயுளே இருக்கிறது என்று அதீத வருத்தத்தில் இருக்-கி-றார்களாம். இதைத் தவிர தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி, எங்களது ஒற்றுமை எதிரிகளின் கண்களை உறுத்துகிறது என்று சவால் விட்டிருக்கிறார்! பன்னீருடன் இருந்தவர்கள் தற்போது பேரத்திற்கு அடிமையாகி தன்-னுடன் இணைந்துவிட்டார்கள். அவர்கள் தன்னுடன் ஒற்றுமையாக இருப்-பது, பன்னீரின் கண்களை உறுத்து-கிறது 
என்பதை தனது வித்தி-யாச-மான பாணி-யில் எடப்பாடி சொல்லி-யிருக்கிறார். கடைசியில் சேக்கிழாரையும், கம்பரையும் பங்காளிகளாக எடப்பாடி ஆக்கிவிட்டார்! எழுதிக் கொடுத்தவர் சேக்கிழாருக்கு வேண்டியவராக இருப்பாரோ என்னவோ! மேலும், வாரத்திற்கு இரண்டு முறையாவது பன்னீருக்கு எதிரான கருத்-தைக்கூறி, அவரது மனதைப் புண்படுத்தி எப்படியாவது ஓரங்கட்டிவிட வேண்டும் என்று குறியாக இருக்கிறார். ஆர்.கே.நகரில் மதுசூதனனை வேட்பாளராகப் நிறுத்தக்கூடாது என்று ஜெயக்குமார் முடிவு செய்து தனது நண்பர்களை போட்டி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வைத்தார். ஏனென்றால் மதுசூதனன் ஜெயிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, தனது மகன் ஜெயவர்த்தனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று எடப்பாடியிடம் ஜெயக்குமார் வேண்டுகோள் வைத்தார்.  மதுசூதனன் தலை-யிட்டு தனது எதிர்ப்பைக் காட்டி அந்த முயற்சியை தடுத்துவி- ட்டார். இதனால் மதுசூதனன் மேல் தீராத பகை கொண்-டுள்-ளார் ஜெயக்-குமார். மதுசூதனனுக்கு சீட் கிடைத்தாலும் அவரை தோற்கடிக்க ஜெயக்குமார் அணியினர் வரிந்து கட்டி வேலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படி ஒருவருக்கொருவர் நான் பெரியவன், நீ பெரியவன் என்று அடிதடியில் இறங்கி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மட்டும்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்பதை ஆளுநரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உள்நோக்க- த்தில் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதாவது, ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்-பான்மை இல்லாத நிலையில், அரசியல் சாசனம் தனக்கு கொடுத்-துள்ள அதிகா-ரத்தை ஆளுநர் பயன்படுத்தி எடப்பாடிக்கு நெருக்கடி தரலாம் என்று அவருக்கு தேர்தல் ஆணையம் சமிக்ஞை காட்டி தனது தீர்ப்பை வழங்கி-யிருப்-பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பா.ஜ.க. அரசின் ராஜ தந்திரம் எப்படியெல்லாம் தேர்தல் ஆணையத்தை ஆட்டிப் படைக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. நாளை நடக்கப்போவதை யார் அறிவார்! & சோழா அமுதன்

No comments: